Monday, March 23, 2009

கண்ணப்பனின் தனித் தமிழ்நாடு ???



" ஈழத்தில் என்ன நடக்கிறது " என்ற தலைப்பில் கடந்த 21-10-2008 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வை.கோ அவர்கள் தலைமையில் நடந்த கருத்தரங்கில், ம.தி.மு.க. வின் அவைத்தலைவர் மு.கண்ணப்பன்,
" தமிழ்நாடு- தனிநாடு என்று சொல்லும் நாள் வரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் விரைவில் மலரும் " என்று பேசிய மு.கண்ணப்பன்,
" தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது " தொடர்பாகவும்,"புலிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவிப்பது " தொடர்பாகவும், சட்டப்பேரவையில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டுவந்து, அந்தத் தீர்மானமும் ஏக மனதாக ஏற்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றால் ஆறரை கோடி தமிழர்களும் ஆதரிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? ஆனால் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை, தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தவில்லை. இப்படித்தான் இருக்கிறது ஈழப்பிரச்னையில் கலைஞரின் நிலைப்பாடு என்று பேசிய மு.கண்ணப்பன்,
இலங்கை உள்விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிக்கொண்டே, அந்த நாட்டுக்கு ஆயுத உதவியோடு நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கி வரும் மத்திய அரசு, நம் வரிப்பணத்தை கொண்டு நம் தமிழினத்தை அழிப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறிய மு.கண்ணப்பன்,
ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார அரசு நடத்தும் இலங்கை அரசிடம் இருந்து தமிழ் இனத்தை மீட்கும் உரிமைப்போராட்டத்தில் புலிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். சொந்த நாட்டில் தமிழக மக்களையும், பிழைக்கச் சென்ற இடத்தில் தமிழ் இனத்தையும் சீண்டும் நிலை தொடர்கிறது, இதையெல்லாம் பொருத்துகொண்டிருக்க முடியாத வருங்கால தமிழ் சந்ததியினர் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள தயாராகி விட்டால் தனித் தமிழ்நாடு நிச்சயம் மலரும் என்று சொன்ன மு. கண்ணப்பன்,
எங்கள் மீது பிரிவினைவாதத்தை தூண்டியதாகவும், சட்ட விரோதமாக கூடியதாகவும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள், ஈழப்பிரச்சினையில் ஒருமித்த கருத்து உருவாகி வரும் நிலையில், மத்திய அரசை திருப்திப்படுத்தவும், தங்களது அரசைக் காப்பாற்றிகொள்ளவும் எங்களை கைது செய்திருக்கிறது கலைஞர் அரசு என்று பேசிய மு.கண்ணப்பன்,
இன்று கலைஞர் முன்னிலையில், ம.தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் தி.கே. சுப்ரமணியுடன் தி.மு.க. வில் இணைந்தார். கோவணம் பறிபோவது தெரியாமல் தோளில் கிடக்கும் துண்டை பெருமையாக நினைக்கும் இளிச்சவாய் தமிழர்கள் இருக்கும் வரை இது போன்ற அரசியல்வாதிகளின் அரசியல் பிரவேசம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

0 கருத்துரை(கள்):