Showing posts with label ஒபாமா. Show all posts
Showing posts with label ஒபாமா. Show all posts

Wednesday, March 4, 2009

ஒபாமா, கார்டன் பிரவுன் சந்திப்பு, ஐ.பி.எல் போட்டிகள் தள்ளிவைப்பு....

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் யார் யாருடன் கூட்டணி அமைக்கிறார்கள், அவர்களுடன் மாநில அளவிலான கூட்டணி எவை, அந்த கூட்டணி தேர்தலுக்கான சீட்டு பேர கூட்டணியா, இல்லை கொள்கை உடன்பாடு கூட்டணியா என என்னைப்போன்ற சாமானியர்கள் பத்திரிக்கை மற்றும் தொல்லைகாட்சியை பார்த்து, விழி பிதுங்கி நிற்கின்ற சூழலில்....
ஏப்ரல் 10 இல் தொடங்குவதாக இருந்த ஐ.பி.எல். போட்டி அட்டவணையை மாற்ற வேண்டும் , 20-20 போட்டிகளின் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்ய உள்ளது, 20-20 போட்டிகளுக்கும், தேர்தல் பாதுகாப்புக்கும் துணை பாதுகாப்பு படையை பயன்படுத்துவது சாத்தியமில்லாதது ஆகும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



ICC செயலர் லார்கெட், பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லாத நாடு, அங்கு சர்வதேச போட்டிகள் நடைபெறுவது சந்தேகத்திற்கு இடமானது என கூறிஉள்ளார். நியூசிலாந்தும் தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளது.







பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தனது வீரர்கள் விளையாட பாதுகாப்பான பகுதி என நினைத்த இலங்கை முகத்தில் கரியை பூசியது பாகிஸ்தான் என இந்திய கிரிகெட் தேர்வு குழுவின் முன்னாள் தலைவர் கிரண் மோரே கூறிஉள்ளார்.
இலங்கை விளையாட்டு வீரர்கள் மீதான தாக்குதலில், பாகிஸ்தான் இராணுவம் பின்னணியில் இருப்பதாக இந்திய உளவுத்துறை அறிவிப்பு.
கிரிகெட் போட்டிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது, வாக்கு பதிவு நடைபெறும் நாட்களில் போட்டிகள் ஏதுமில்லை, ஆகையால் அட்டவணையை மாற்ற தேவையில்லை என்று வாரியத் தலைவர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.



தீவிரவாதிகளின் இலக்கு சர்வதேச மட்டைபந்து வீரர்களின் பக்கம் திரும்பி இருப்பதாகவும், லாகூர் தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதிகளின் இலக்கு பாகிஸ்தானில் மட்டுமல்ல, துணைகண்டத்திலும் தொடரலாம் என அஞ்சுவதாக சர்வதேச வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தீவிரவாதிகளின் இருப்பிடமாக இருக்க கூடாது என்பதில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் கவனமாக இருப்பதாகவும், அது கடந்த காலங்களில் பெருத்த ஏமாற்றத்தை அளித்ததாகவும் ஒபாமா மற்றும் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளனர், மேலும் உலக பொருளாதார வீழ்ச்சியை எதிர்த்து போராட உலகளாவிய ஆதரவை பெற முயற்சி மேற்கொள்ள போவதாகவும் அறிவித்துள்ளனர்.



ஐயோ ஐயோ ஐயோ ... ஒன்னுமே புரியல. ஒட்டு மொத்த உணர்வுகளையும் இழந்து இவர்கள் ஏதாவது செய்வார்கள் என ஏமாந்து காத்திருக்கும் தமிழனுக்கு கிடைப்பது இது போன்ற செய்திகள்தான். ஈழம் எங்கே....?