Showing posts with label தீர்ப்பு. Show all posts
Showing posts with label தீர்ப்பு. Show all posts

Wednesday, March 18, 2009

வழக்கறிஞர்களுக்கு வெற்றி ! காவல்துறைக்கு ????




கடந்த பல நாட்களாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்களின் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது . உயர்நீதி மன்றம், இன்று பிறப்பித்த உத்தரவில், தடியடி நடத்திய போலீசார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் , இணை ஆணையர் சுப்பிரமணியன் , இருவரையும் பணி இடை நீக்கம் செய்யப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது


வழக்கறிஞர்கள் நாளை சென்னையில் பேரணி நடத்த உள்ள நிலையில், இந்த உத்தரவு அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளனர். நாளைய பேரணி, வெற்றிப் பேரணியாக நடக்கும், வேலை நிறுத்தம் பற்றி நாளை வழக்கறிஞர்கள் சங்கம் கூடி முடிவு எடுப்பார்கள் என கூறியுள்ளனர்.


வழக்கறிஞர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ள உயர்நீதி மன்றம், இந்த கொலை வெறி தாக்குதல் வழக்கில் யாரையும் பணிஇடை நீக்கம் செய்யக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதா என சட்ட வல்லுனர்கள்தான் தெரிவிக்கவேண்டும்.