Showing posts with label ஓட்டு கட்சி. Show all posts
Showing posts with label ஓட்டு கட்சி. Show all posts

Thursday, February 26, 2009

இந்தியாவின் மனித உரிமை போராளிகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் ....

"ஈழ தமிழர் தோழமை குரல் "அமைப்பின் ஒருங்கிணைபாளர்களில் ஒருவரான லீனாமணிமேகலை சமீபத்தில் டெல்லி சென்று ஈழ தமிழர்களை காப்பாற்ற கோரி தேசிய அளவிலும் , சர்வதேச அளவிலும் ஆதரவு கேட்டு நாடாளுமன்றம் எதிரே போராட்டம் நடத்தி தமிழகம் திரும்பியிருக்கிறார்.


இவர் அங்கு நடந்த சம்பவங்களை பட்டியலிடுகையில், நாம் இலங்கையில் நடைபெற்று வரும் இனபடுகொலையை , ஈழ பிரச்சினையை தேசிய உடகங்களிலோ, தேசிய அளவிலான மனித உரிமை போராட்ட குழுக்களிடமோ சரிவர கொண்டு சேர்க்கவில்லையோ என்ற எண்ணமே ஏர்படுகிறது, அல்லது இந்தியாவின் இறையாண்மையை காரணம் காட்டி இவர்கள் ஒதுங்குகிறர்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது. தேசிய அளவிலான செய்தி மற்றும் காட்சி உடகங்களை பற்றி நாம் சிறிதளவேனும் கவலைப்பட வேண்டாம் . அவர்களின் நிலைபாட்டில் இருந்து இன்றளவும் மாறுபடாமல் இலங்கையின் பிரதிநிதிகளாகவே நடந்து கொள்கின்றனர் , இதன் மூலம் அவர்களின் கல்லாவையும் நிரப்பிகொள்கின்றனர். ஆனால் தேசிய அளவிலான மனித உரிமை போராளிகளும் இப்படித்தான் என என்னும் பொது அதிர்ச்சியடைய செய்கிறது.
இனி லீலா மணிமேகலை அவர்களின் வார்த்தைகளாக வந்த பத்திரிக்கை செய்தியிலிருந்து சில ....

பிரணாப் முகர்ஜியிடம் கெஞ்சவா நாற்பது எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பிவைத்தோம் , இலங்கையின் இனபடுகொலையை தேசிய அளவில் கூட விவாதிக்க படவில்லையே என்ற ஆதங்கத்தினால்தான் நாடாளுமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடத்த சென்றோம் . அருகிலேயே மேதாபட்கர் , அருந்ததி ராய் போன்ற மனித உரிமை போராளிகள் இருக்கிறார்கள் . அவர்கள் ஈழத்தில் நடக்கும் இனபடுகொலையை பற்றி முழக்கமிடுவார்கள் என நம்பினோம். ஆனால் அவர்களின் நிஜ முகத்தை இப்போதுதான் புரிந்து கொண்டோம்.





எங்களுக்கு அருகில் "நிலங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் " தலைவி மேதா பட்கர் "ஆதிவாசி மக்களின் வாழ்விடம் பாதுகக்கபடவேண்டும் " என்று வலியுறுத்தி கொண்டிருந்தார், அவரிடம் சென்று ஈழ தமிழர்களின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படவேண்டும் என நீங்கள் பேசினால் அது உடகங்கள் மூலமாக உலகை சென்றடையும் என வற்புறுத்தினோம். அதற்க்கு அவர் "அவர்கள் எல்லோரும் விடுதலைபுலிகள், அவர்கள் இந்தியாவில் இருந்து சென்ற மலையக தமிழர்களை விரட்டியடித்தார்கள் "அவர்களுக்கு ஆதரவாக நான் குரல் கொடுக்க முடியாது என மறுத்து விட்டார்.


. இராக் பிரச்சினையில் தலையிட அமெரிக்காவுக்கு அதிகாரமில்லை, இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.


"காஷ்மீர் என்பது அப்பகுதி மக்களுக்குத்தான் சொந்தம், இந்தியாவும், பாகிஸ்தானும் அங்கிருந்து வெளியேற வேண்டும் "
என்று துணிச்சலாக போராடி கொண்டிருக்கிற அருந்ததிராய்யிடம் சென்று அழைத்த போது மௌனமே பதிலாக தந்தார்.
3. நாங்கள் அரசியல் ஆதரவு கேட்டு பகுஜன் சமாஜ் கட்சியை அணுகினோம், அவர்களோ புலிகள் , தலித்களுக்கு எதிரானவர்கள், அவர்களுக்கு ஆதரவு தரமாட்டோம் " என்றனர்.
4. சில முஸ்லீம் அமைப்புகளிடம் கேட்டோம் , "புலிகள் , முஸ்லிம்களை கொன்றவர்கள், அவர்களை தமிழர் பகுதியிலிருந்து விரட்டியடிதவர்கள் , எனவே ஆதரவு தர மாட்டோம் " என்றனர்.
5. அமீர்கான் மொட்டை அடித்ததையும், மங்களூர் மதுபான விடுதியில் பெண்கள் தாக்கப்பட்டதையும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பிய என்.டி.டிவி, ஆஜ்தக் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விடுத்த அழைப்பும் வீண்தான். ஐந்து நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடித்த போது, செல்வச்சீமான்கள் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்றினார்கள் , ஆனால் இலங்கை அரசின் கொத்து குண்டுகளுக்கு செத்து மடியும் தமிழர்களுக்காக பேச மறுக்கிறார்கள்.

"ஈழ தமிழர்களும் மனிதர்கள்தான் என்பதை இந்திய மனித உரிமை மஹாத்மாக்கள் எப்போது உணர போகிறார்களோ" என்று வேதனையோடு குறிப்பிடுகின்றார்.
இது இப்படி இருக்கையில் "ஈழ தமிழர் தோழமை குரல் " என்ற பெயரில் மற்றொரு பிரிவினரும் ஆர்பாட்டம், போராட்டம் என்று தம் " வலிமையை ' காட்டி வருகின்றனர்.
இதையெல்லாம் பார்க்கும்போது , இங்குள்ள அரசியல்வாதிகள் தம் சுய லாபத்திற்க்காக (ஒரு சிலரை தவிர ) தமிழர்களை வைத்து ஓட்டு வியாபாரம் செய்கிறார்கள் என்றால் மிகையாகாது. அதுபோல இங்கிருக்கும் மனித உரிமை போராளிகள் ( தங்களை அப்படி வெளிப்படுத்தி கொள்பவர்கள் ) இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, இந்திய அரசின் சலுகைகளை முழுமையாக பெற்றுக்கொண்டு, இந்திய அரசுக்கு எதிராக போராடுபவர்கள் என்பதே உண்மையாகும்.
தேசிய, சர்வதேச ஊடகங்களை நம் பக்கம் திருப்ப, உணர்வுள்ள தமிழர்கள் ஒட்டுமொத்த தலைமையின் கீழ் ஓரணியாக திரண்டு போராடினால் மட்டுமே இது சாத்தியமாகும். நாம் நமது எதிர்ப்பை நமக்குள்ளேயே பகிர்ந்து, உயிரை மாய்த்து கொள்ளாமல், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம், ஊர்வலம் என வழக்கமான நடைமுறைக்கு வெளியே வந்து, நமது முழுமையான எதிர்ப்பை இந்திய அரசாங்கத்தின் பக்கம் திருப்பினால், இந்தியாவை மட்டுமன்றி சர்வதேசத்தையும் நம் பக்கம் திருப்ப முடியுமே.

"உங்களுக்கு ஒவ்வொறு முறையும் அதிர்ஷ்டம் வர வேண்டும்
எங்களுக்கு அதிர்ஷ்டம் ஒருமுறை வாய்த்தால் போதும் "
ஒரு போராளி சொன்னது.

இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நம் கண்மணிகள், ரத்தத்தின் ரத்தங்கள், உடன்பிறப்புகள் எல்லாவற்றையும் மறந்து, ஓடியாடி தேர்தல் வேலை செய்யவேண்டாமா. அதற்க்காக இப்போதே ஓட்டு கட்சிகள் முழு முனைப்புடன் செயல்பட தொடங்கியுள்ளன.
நாம் நம் ஒற்றுமையின் மூலம் இவர்களுக்கு பாடம் கர்பிப்போமா.